நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க - டிடிவி தினகரன் கோரிக்கை

நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். முழு முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்டோக்களும் அனுமதி அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள்  இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதனைப் பரிசீலித்து அறிவிக்கவேண்டும் என டி.டி.வி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.